'அரசு, அரசன், அரசர்’ ஆகிய சொற்கள் சங்ககாலம் தொட்டுத் தமிழில் பயின்று வந்துள்ளன. வலிமை என்னும் பொருள்தரும் ‘உரவு-உரவோன்’ என்னும் சொற்கள்வழி இச் சொற்கள் பிறந்தன எனப் பாவாணர் விளக்கினார். ‘அரசன்’ ஆகிய இத் தமிழ்ச்சொல், கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற்கிருதத்தில் rāj, rājan போன்ற சொற்களுக்கு அடிப்படையானது. மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் அரசாட்சியைக் குறிக்கும் regere (Lat.), ஆட்சியரைக் குறிக்கும் regent, regal (*reg-to move in a straight line: Watkins Dict., Online Etymology Dict.), ஆட்சியைக் குறிக்கும் rule, செல்வம் குறிக்கும் rich போன்ற பல சொற்களுக்கும் முதலாகியது.