மருதநிலம் குறித்த தமிழ்ச்சொல் ‘அகரம்’. மலைகளுக்கும் ஏரிகளுக்கும் அகமாக அமைந்த வளவயல் முதற்கண் ‘அகம்’ எனப்பட்டு, அது பின்னர் முகம் > முகர் போல் மகர ரகர மாற்றத் தில் ‘அகர்’ என்றாகி நிலம் குறித்தது. ‘அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயிலென்’ (திருமந்.1860:1) எனத் திருமூலர் கூறிய ‘அகரம்’ சொல்லும் வளவயல் குறிப்பதுவே.
அகம் > அகர் சொல்லின் வரலாற் றைத் தமிழ் மரபில் விளக்கமுடிகிறது. ‘அகநாடு அணைந்தான்’ (சீவக.1613: 4) என்ற சீவகசிந்தாமணித் தொடருக்கு நச்சினார்க்கினியர், ‘அகம் – மருதம்’ என்று உரை எழுதினார். அதன் அடிப் படையிலேயே, சங்க இலக்கியத்தைச் சீவகசிந்தாமணிக்குப் பிறகு பதிப்பித்த உ.வே.சா., ‘அகநாடு புக்கு’(மதுரைக். 149) என்ற தொடருக்குக் குறிப்புரை எழுதியவிடத்து ‘அகம் என்பதற்குப் பொருள் மருதம்’ என்று வழிமொழிந்தார்.
‘அகரம்’ என மருதநிலம் குறித்த சொல், ‘அகரப்புத்தூர்’ எனப் பெயருக்கு முன்பாகவும் ‘உள்ளகரம்’ எனப் பெயருக்குப் பின்பாகவும் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்ப்பெயர்களில் வழங்கு கின்றது. மேலகரம் (திருநெல்வேலி மாவட்டம்); காட்டகரம் (அரியலூர் மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்); புத்தகரம் (தஞ்சாவூர் மாவட்டம்); கோட்டகரம் (திருவண்ணாமலை மாவட்டம்); உள்ளகரம் (சென்னை மாவட்டம்); அகரப்புத்தூர் (கடலூர் மாவட்டம்) போல்வன ‘அகரம்’ சொல் இடம்பெற்ற ஊர்ப்பெயர்களாகும்.
‘அகரம்’ ஆகிய மருதநிலம் குறித்த தமிழ்ச்சொல் கீழை, மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் பொதுவில் ‘நிலம்’ என்ற பொருளில் வழங்குகின்றது. மலைகளுக்கும் ஏரிகளுக்கும் இடையில் அகமாக அமைந்த நிலம், அகம் > அகர் எனப்பட்ட பொருட்பொருத்தத் தை அறியாமல் கால்நடைகளும் வழி நடைப் போக்கர்களும் உலவுவதற்கு இடமாக இருக்கும் நிலத்தின் தன்மை கருதி, இயங்குதல் பொருள்தரும் *ag(to drive) என்னும் முந்து இந்தோ-ஐரோப்பிய வேரிலிருந்து *agro (field) ஆகிய சொல் பிறந்தது என இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அறிஞர்கள் எழுதினர்.
*agro-
Proto-Indo-European root meaning "field;" probably a derivative of root *ag- "to drive, draw out or forth, move."
-Online Etym. Dict.
to drive எனப் பொருள் தரும் *ag என்னும் வேரும், ‘உகை’ என்னும் தமிழ்வேரிலிருந்து உகர அகர மாற்றத் தில் பிறந்த ‘அகை’ என்னும் தமிழ் ச்சொல்லிலிருந்து உகை > அகை > ag எனப் பிறந்தது. ஆதலின், தமிழின் ‘அகம்’ சொல்லே, agro ஆகிய சொல்லிற்கு மூலமாகும்.
அகம் > அகர் எனப்பட்ட இத் தமிழ்ச்சொல், தமிழில் உள்ளது போன்றே agros field (Greek), ager (genitive agri) a field (Latin), akrs (Gothic) என ‘அகர்’ வடிவிலும் ககர சகர மாற்றத்தில் கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற் கிருதத்தில் aj > ajras (plain, open country) என்றும் மேலை இந்தோ-ஐரோப்பியப் பழைய ஆங்கிலத்தில் æcer field (Old English) என்றும் திரிந்து வழங்குகின்றது.
அகரம் = மலைகளுக்கும் ஏரிகளுக் கும் அகமாக அமைந்த வளவயல்; வளவயல் சூழ்ந்த ஊர்.
அகநாடு = மருதநிலப் பகுதி; ‘அகநாடு புக்கு’(மதுரைக்.149, ‘அகம் என்பதற்குப் பொருள் மருதம்’ – உ.வே.சா. குறிப்புரை); ‘அகநாடு அணைந்தான்’ (சீவக.1613:4; ‘அகம் – மருதம்’ - நச்சினார்க்கினியர் உரை.)
அகம் > அகர் > அகரம் = அகநாடென் னும் மருதநிலத்தூர், நகரம் > பாவாணர் (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி-1). அகம் > அகர். மகர ரகர மாற்றம். ஒ.நோ. முகம் > முகர் (தமிழ் வரலாறு-1, ப.74)
‘அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயிலென்’ (திருமந்.1860:1)
மன்னர்கள் சங்ககாலத்தில் மருத நிலங்களைப் போரில் வென்ற வீரர்களுக்குப் பரிசளித்தனர். (‘தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே’, புறம். 312:4, ‘வெல் பொறியும் நாடும் விழுப் பொருளும் தண்ணடையும் கொல்களிறும் மாவும் கொடுத்து அளித்தான்’, புறப்.வெண்பா.124:1-2). ஆயின், இடைக் காலத்தில் மருதநிலங்களைப் பார்ப்பனர் களுக்குக் கொடையாக அளித்தனர்.