எண்ணுப்பெயர்கள்

    ‘எண்’ என்னும் சொல், தமிழில் பெயராகவும் வினையாகவும் வழங்குகின்றது. ‘ஒன்று, இரண்டு’ என வழங்கும் எண் சொல், பெயர்ச்சொல்லாகும். ‘நல்லன எண்’ என வழங்குமிடத்து ‘எண்’, வினைச்சொல்லாகும். ‘எண்’ என்னும் இவ் இரண்டு சொற்களும் ‘எண் -எண்ணு’ ஆகிய வினைச்சொல், ‘எண்ணம்’ என்ற பெயர்ச்சொல்லையும் அளிக்கும். ‘எ’ என்னும் எழுச்சிப் பொருளிலிருந்து மேன்மேலும் உயர்வதன் காரணமாக எண்ணத்தைக் குறிக்கின்ற ‘எண்’ சொல்லும், ஒன்று, இரண்டு, மூன்று என மேன்மேலும் உயர்வதன் காரணமாக எண்ணினைக் குறிக்கின்ற ‘எண்’ சொல்லும் தமிழில் பிறந்தன.

ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்கள், மிகத் தொடக்க காலத்தில் வளர்ந்தவை. கை விரல்கள் ஐந்து உள்ளதன் அடிப்படையில்,  ‘கை’ என்னும் சொல்லிலிருந்து ‘ஐ-ஐந்து’ என்னும் சொல் உருவானது என்பர். இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் பத்து என்பதன் காரணமாக, ‘பத்து’ என்னும் எண்ணினை எளிதாகத் தொடக்க காலத்தில் மக்கள் உருவாக்கினர். பத்திற்கு மேற்பட்ட எல்லா எண்களும் பத்துடன் ஒவ்வொன்றாகச் சேர்வதன் அடிப்படையில் பத்து+ஒன்று-பதினொன்று; பத்து+இரண்டு-பன்னிரண்டு எனவும் வளர்ந்து பத்து+ஒன்பது-பத்தொன்பது என்னும் எண்ணிற்குப் பிறகு, இரு+பத்து-இருபது என்றே எண்கள் வளர்ந்தன. இருபதிற்கு மேல், முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது என்று வளர்ந்த முறையில் தொண்ணூறு என இன்று குறிக்கும் எண்ணுப்பெயர் தொடக்கத்தில் தொள்+பது-தொண்பது-ஒன்பது என்றே இருந்தது. உடம்பில் ஒன்பது துளைகள் இருப்பது கருதி, துள்-துளை என்னும் சொல்லிலிருந்து துள்-தொள்-தொள்+து-தொண்டு என ஒன்பதினைக் குறிக்கும் சொல் உருவானது எனப் பாவாணர் எழுதியுள்ளார். ‘தொண்டு’ என்னும் சொல் ஒன்பதினைக் குறிக்கும் ஆட்சியினைத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காணமுடிகிறது. எனவே, ‘எண்பது’ என்பதற்கு அடுத்த பத்தாவது எண், ‘ஒன்பது’ என்பதேயாகும். ஒன்பது, பத்து முடிந்த பிறகு, நூறு என்ற எண் தொடக்கத்தில் உருவாகவில்லை. ‘பத்துப்பத்து’ என்றே அவ் எண்ணினை அழைத்தனர். நூறுபாடல்கள் கொண்ட எட்டுத்தொகை நூல் ஒன்று, ‘பதிற்றுப்பத்து’ என அழைக்கப்பட்டத்தில் இவ் வரலாறு காணலாம்.

நூறு

    ‘நூறு’ என்ற எண் தொடக்கத்தில் இன்று நாம் குறிக்கின்ற ‘100’ என்ற எண்ணினைச் சுட்டவில்லை. ஒரு பெருந்தொகையான எண் என்ற பொருளில், ‘நூறு’ ஆகிய எண்ணுப்பெயர் உருவானது என்பார் பாவாணர். தமிழில் ‘நூறு’ என்ற சொல்லுக்கு ‘நுண்மையான துகள், புழுதி’ என்பன பொருளாக உள்ளது. ‘நுல்’ என்னும் வேருக்குச் ‘சிறிது’ என்பது ஓர் பொருள். நுல் – நுறு – நுறுங்கு – நொறுங்கு என்பதில் ஒரு பொருள் சிறிதாதலைக் குறிக்கக் காண்கிறோம். நுல் – நுறு – நூறு – நூறுதல் என்பது அழிதலை, அழித்தலைக் குறிப்பதைத் தமிழ்ச்சொல் வரலாற்றில் காணமுடிகிறது. அரண்களை அழித்ததை ‘அரண்பல நூறி’ (அகம்.69) என அகநானூறு கூறும். போர்க்களத்தில் யானைகளை வெட்டி அழித்ததை ‘யானை யருஞ்சமந் ததைய நூறி’ (புறம்.93) எனப் புறநானூறு கூறும். நெடிது வந்த பகைகளை அழிப்பதைப் ‘பழம் பகை தவ நூறுவாய்’ (சீவக.324) எனச் சிந்தாமணி கூறும்.

ஒரு பொருளினைச் சிறிது சிறிதாக அழித்தல் ‘நூறுதல்’ என்ற வினையால் குறிக்கப்பட்டது. சிறிய துகள் போன்றவை இதன் அடிப்படையிலேயே ‘நூறு’ எனப்பட்டன. பசுமாட்டின் சாணத்தால் செய்த வறட்டியை எரித்துப் பெற்ற சாம்பல், ‘நூறு’ எனப்பட்டது. ‘திரு’ என்னும் சிறப்புப்பொருள் முன்னொட்டு சேர்ந்து அது ‘திருநூறு’ என்றானது. இத் ‘திருநூறு’ சொல்லே பின்னர், ‘திருநீறு’, ‘துண்ணூறு’ எனத் திரிந்தது.  

நூறுதல் உற்று, நொறுங்கிய சிறிய துகள் ‘நூறு’ எனத் தமிழில் அழைக்கப்பட்டதன் சுருக்க வரலாறு மேல் உரைத்ததாகும். ‘நூறு’ என்னும் எண்ணுப்பெயர், தொடக்கத்தில் முற்குறிப்பிட்டது போன்று, துகள் போன்ற ஒரு பேரெண்ணிக்கையினைக் குறித்ததாகப் பாவாணர் உரைத்தது எண்ணுப்பெயர் குறித்த வரலாற்றில் ஓர் நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆய்வு எனலாம்.

நூறு- பாவாணர் விளக்கம்

நுல் – தோன்றல் கருத்தில் நுண்மைக் கருத்து

நுல் – நுள் – நுறு – நூறு. நூறுதல் = 1. தூளாக்குதல். “அரண்பல நூறி” (அகம்.69). 2. துணித்தல். “யானை யருஞ்சமந் ததைய நூறி” (புறம்.93). 3. அழித்தல். “பழம் பகை தவ நூறுவா யென” (சீவக.324). 4. இடித்தல். (பு.வெ.6:26, உரை). 5. அறைதல். “முலைபொலி யாக முருப்ப நூறி” (புறம்.25). 6. நெரித்தல். “கரும்பினைக் கண்டகர நூறி” (நாலடி.156).

ம. நூறுக, தெ. நூரு.

நூறு = 1. இடித்த அல்லது அரைத்த மா, பொடி, தூள். “நூறொடு குழீஇன கூவை” (மலைபடு.137). 2. சுண்ணாம்பு. “கோடு சுடு நூற்றினர்” (மதுரைக்.401). ம. நூறு, து. நூத்ர. 3. நூறு என்ற எண் (பத்துப்பத்து). ம., தெ., க. நூறு.

நூறு எண்ண முடியாத துகள்களைக் கொண்டிருத்தலால், அதன் பெயர் பத்திற்கு மேற்பட்ட முதற் பேரெண்ணைக் குறித்தது.

செந்தமிழ்ச் செல்வி, மே, 1973

அரக்கு - அலக்கு - லக்கு – லக்  -lac, lakh

ஆங்கில வேர்ச்சொல் அறிஞர் கீற்று, ‘நூறாயிரம்(100,000)’ குறிக்கும் ‘lac’ சொல் உருவான வரலாற்றை விளக்குவது ‘நூறு’ என்ற எண்ணின் வரலாற்றைப் பாவாணர் விளக்கியதுடன் ஒத்துள்ளது. தேன்கூட்டில் நிறைந்திருக்கும் பெருந்தொகையான ஈக்களின் எண்ணிக்கையை ஒத்த ஒரு பேரெண் ‘lac’ என்பதே அவர் தரும் விளக்கம்.

a lac, hundred thousand; apparently with reference to the number of lac & insects in a nest

Skeat

‘அர்’ என்னும் தமிழ் வேர் சிவப்பு நிறப்பொருள் குறிக்கும் சொற்கள் பலவற்றை ஈன்றுள்ளது. அவ்வகையில் உருவானதுதான் குருதியைக் குறிக்கும் ‘அரத்தம்’ என்னும் சொல்லும். அரக்கு, சிவந்த நிறமுடையது. சிவந்த ஒளிக் கதிர்களையுடைய கதிரவன் ‘அருணன்’ எனப்படுவான். இவ்வாறு ‘அர்’ என்னும் வேர், சிவந்த நிறமுடைய பல பொருள்களைக் குறிக்கத் தமிழில் சொல்லளித்துள்ளது.

‘அரத்தக் குழம்பு' என்பது தமிழிலக்கியங்களில் பேசப்படுவது. சிவப்பு நிறச் சாயம் இதுவாகும். இது, சிவந்த நிறமுள்ள மெழுகிலிருந்தும் தேனடைகளிலிருந்தும் உருவாக்கப்படுவதாகும். ‘அரத்தக் குழம்பு’ என்ற இச்சொல் ‘அலத்தக்குழம்பு’ என்றும் இலக்கியங்களில் பேசப்படும். ‘இருப்பை மரம் – இலுப்பைமரம்’ எனப்படும். ‘கடலைத் துரும்பு - துலும்பு- தொலும்பு’ எனப்படும். இங்கு ர ல மாற்றம் நிகழ்ந்தது. இதே ர – ல திரிபில்தான், அரத்தம் என்ற சொல்லினை அலத்தம் - லத்தம் எனத் தமிழ் மக்கள் பேச்சுவழக்கில் பயன்படுத்துவர். திருவாரூர் ஊர்ப்பெயரினைத் திருவாலூர் என்றும் கூறுவதுண்டு.

தமிழின் அரக்குச்சொல், ‘அலக்கு - லக்கு – லக்’ எனச் சமற்கிருதத்திலும் பெர்சியன் மொழியிலும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே சென்று திரிந்து விட்டது. மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகட்கும் இச்சொல், பெர்சியன் வழியாக வந்து சேர்ந்து விட்டது. நூறாயிரம் என்ற எண்ணினைக் குறிக்கும் ‘Lac’ ஆகிய இந்தோ ஐரோப்பியச் சொல், மேற்குறிப்பிட்ட வரலாற்றின் அடிப்படையிலேயே தோன்றி இந்தோ ஐரோப்பிய நாடுகளிலும் பிற நாடுகளிலும் வழங்கிவருகின்றது.

ஆங்கில வேர்ச்சொல் அறிஞர் கீற்று 100000 என்ற நூறாயிரம் எண்ணினைக் குறிக்கும் Lac என்ற சொல், சிவந்த மெழுகினையும் தேனடையையும் குறித்ததென்றும் பிறகு, தேனடையில் தங்கியிருக்கும் பெருந்தொகையான ஈக்கள் அனைய எண்ணினைக் குறித்ததென்றும் வியப்படையும் படி எழுதியுள்ளார். அவர் ‘Lac’ சொல்லினைப் பெர்சிய, சமற்கிருத மொழிகட்கு உரியதென்று கூறினார். ஆனால் பெர்சியனிலும் சமற்கிருதத்திலும் உள்ள ‘Lac’ சொல். தமிழின் 'அரக்கு'ச் சொல்தான் என்று கூறாது விட்டு விட்டார் (பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இந்தோ-ஐரோப்பிய உறவு, பக்.101-102).

அயிர் – ஆயிரம்

          ‘நூறு’ எண்ணும் நூறாயிரத்தைக் குறிக்கும் ‘lac-lakh’ எண்ணும் தொடக்கத்தில் ஒரு பெருந்தொகையான எண் என்னும் பொருளில் உருவாகிப் பின்னர், முறையே 100, 1,00,000 என்ற எண்களை வரலாற்றில் குறித்ததாக உருவானது போன்றுதான், ‘ஆயிரம்’ என்ற எண்ணும் ஒரு பெருந்தொகையான எண்ணினைத் தொடக்கத்தில் குறித்துப் பின்னர் 1000 என்று இன்று நாம் குறிக்கும் எண்ணுப்பெயராக மாறியது என்பதும் பாவாணர் தரும் விளக்கமாகும்.

          ‘அயிர்’ என்னும் சொல், நுண்ணிய பொருள்களைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.  ‘அயிர்துகள் முகந்த ஆனா ஊதை’, (நற்.163:2), ‘அயிர்திணி அடைகரை’ (அகம்.30:7), ‘அயிர்மணல் படுகரை போகி’ (அகம்.113:20), காவிரிப் பேரியாற்று அயிர் (அகம்.181:12) என்ற இடங்களின் ‘அயிர்’ சொல் நுண்ணிய மணல் குறிப்பது.

          ‘அயிர்’ என்னும் சொல், அயிர்+ஐ-அயிரை எனத் திரிந்து, நுண்ணிய சிறிய மீன்களைக் குறித்ததைச் சங்க நூல்களில் காண்கிறோம். ‘இருஞ்சேற்று அயிரை’ (நற்.272:5), ‘அயிரை பரந்த அந்தண் பழனம்’ (குறுந்.178:1) என்பன மீன் குறிக்கும் ‘அயிரை’ ஆட்சிகள்.

          ‘அயிர்’, ‘அயிரை’ ஆகிய இச் சொற்கள், ‘ஐது’ என்னும் தமிழ்ச்சொல்லுடன் உறவுடையன. மெல்லிதாகச் சென்று படிந்த சந்தனப் புகை ‘அகில் ஆர் நறும் புகை ஐது சென்று’ (புறம்.337:10) எனவும் மெல்லிதாகத் தாழ வீழ்கின்ற மழை ‘ஐதுவீழ் இகுபெயல்’ (சிறுபாண்.13) எனவும் ‘ஐது’ சொல் மென்மைப் பொருளில் ஆளப்பட்டுள்ளது.

          தமிழில் இவ்வாறு, ‘ஐது, அயிர், அயிரை’ ஆகிய சொற்கள், சிறிதான, நுண்மையான பொருள்களைக் குறிக்கும் ஆட்சிகளைக் காணமுடிகிறது. சிறிய துகள்களைக் குறித்த ‘நூறு’ சொல், 100 என்னும் எண்ணினைக் குறித்ததுபோல், தேனடையில்  தங்கியிருக்கும் பெருந்தொகையான ஈக்களிலிருந்து பெருந்தொகையான 100000 என்னும் எண்ணினைக் குறிக்கும் ‘lac’ சொல் பிறந்தவாறு, ‘அயிர்’ ஆகிய நுண்ணிய மணலிலிருந்து அம் மணலின் தொகையைப்போல், பெரிதாக இருந்த ஓர் எண்ணினைக் குறிக்கும் ஆயிரம் சொல் பத்து நூற்றினைக் குறித்த ஆயிரத்தைப்(1000) பின்னர்க் குறிப்பதாயிற்று என்பார் பாவாணர்.

அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம். ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமா யிருப்பதால், மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று. “வாழிய...நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம். 9), “நீநீடு வாழிய...வடுவாழ் எக்கர் மணலினும் பலவே" (4. 55).

-வடமொழி வரலாறு-1, ப.82

தாமரை, வெள்ளம், ஆம்பல், நெய்தல், குவளை, சங்கம்

நூறு, ஆயிரம் ஆகிய சொற்கள், தொடக்கத்தில், நொறுங்கிய பொடிகளின் எண்ணிக்கை போலவும் நுண்ணிய மணல்களின் எண்ணிக்கை போலவும் ஒரு பெருந்தொகையான எண்ணினைக் குறித்துப் பின்னர் முறையே 100, 1000 ஆகிய குறிப்பிட்ட எண்களைக் குறித்ததன் வரலாற்றினை ஒப்புநோக்கத் தமிழில் மேலும் சில சான்றுகள் உள்ளன. அதாவது, தொல்காப்பியத்தில் பேரெண்களைக் குறிக்கும் நூற்பா ஒன்று உள்ளது. அந் நூற்பா, ‘ஏழ்’ என்ற எண்ணுப்பெயருடன் ‘ஐ’ என்ற ஈற்றிலும் ‘அம்’ என்ற ஈற்றிலும் ‘பல்’ என்ற ஈற்றிலும் முடிகின்ற எண்ணுப்பெயர்கள் வந்து புணரும் முறை பற்றிக் கூறுகிறது. உரையாசிரியர்கள் ‘ஐ, அம், பல்’ என ஈற்றில் முடியும் எண்ணுப்பெயர்களுக்குத் ‘தாமரை, வெள்ளம், ஆம்பல்’ என எடுத்துக்காட்டுகள் தருவர்(தொல்.எழுத்து.394).

தாமரை மலரில் இதழ்கள் பெருந்தொகையில் உள்ளன. வெள்ளம் என்பது நீர்த்துளிகளால் ஆன நீர்ப்பெருக்கம். ஆம்பல் மலரிலும் இதழ்கள் பெருந்தொகையில் பொருந்தி இருக்கின்றன. இவ் அடிப்படையில், தாமரையும் வெள்ளமும் ஆம்பலும் பேரெண்களைக் குறிப்பதற்குத் தமிழ்மரபில் தோன்றிய சொற்களாக இருக்கலாம். தொல்காப்பிய உரையாசிரியர் ஆ. சிவலிங்கனார், தாமரை, வெள்ளம், ஆம்பல் போல் வேறு சிலவுமான எண்ணுப்பெயர்கள் இடம்பெற்ற பரிபாடல் பாடலினை எடுத்துரைக்கின்றார்.

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை                (பரி.2:13-15)

          நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் ஆகிய ஆறு பெயர்கள் இங்கு உள்ளன. தொல்காப்பியர் கூறிய தாமரை இங்குக் கமலம் எனச் சொல்லப்பட்டுள்ளது. மற்ற, வெள்ளம், ஆம்பல் எண்ணுப்பெயர்களும் இங்கு உள்ளன. இம் மூன்றுமில்லாமல் நெய்தல், குவளை, சங்கம் ஆகிய எண்ணுப்பெயர்களும் தமிழ்வழக்கில் இருந்துள்ளது தெரியவருகிறது. தாமரை, ஆம்பல் ஆகிய மலர்களைப் போலவே, நெய்தல், குவளை என்பனவும் மலர்களின் பெயர்கள். இம் மலர்களில் பெருந்தொகையான இதழ்கள் இருப்பதனை யொட்டி, இம் மலர்ப்பெயர்கள் பேரெண்களுக்கு உரியனவாக ஆகியிருக்கலாம்.

          ‘சங்கு’ என்னும் சொல், ‘அங்கு’ என்னும் வளைவுப்பொருள் வேரிலிருந்து அங்கு-யங்கு-சங்கு எனத் தமிழில் உருவானதாகும். ‘சங்கு’ சொல்லுடன் ‘அம்’ என்னும் பருமைப்பொருள் ஈறு சேர்ந்து ‘சங்கம்’ என்றாயிற்று. கடலில் சங்குகள் பெரும்பெரும் கூட்டமாக உலவுவது உண்டு. இதன் காரணமாகச் ‘சங்கம்’ சொல், பேரெண் குறிப்பதற்கு உரியதாகியிருக்கலாம்.

சங்கம் - Hundred billions or one hundred thousand crores; இலட்சங்கோடி

செ.ப.க.த.பே

          ‘தாமரை’ என்ற எண்ணுப்பெயரினைச் சமற்கிருதம் ‘பதுமம்’ என மொழிபெயர்த்து அழைத்துக்கொண்டதாகத் தெரிகிறது. ‘பதுமம்’ சொல், 1000 millions or billions ஆகிய பேரெண்ணினைக் குறிப்பதாக மானியர் கூறுகிறார்.

அயிர் – ஆயிரம் - sahasra

‘அயிர்’ என்னும் நுண்மணல் குறித்த சொல்வழி உருவான ‘ஆயிரம்’ என்னும் சொல், திரவிட மொழிகளில் எவ்வாறு திரிந்து வழங்குகின்றது என்பதையும் எழுதிய பாவாணர், அவ் ‘ஆயிரம்’ ஆகிய தமிழ்ச்சொல்லே, சமற்கிருதத்தில் ‘hasra’ எனத் திரிந்தது என்பதையும் வடமொழி வரலாறு நூலில் எழுதினார்.

ம. ஆயிரம், கு. ஆயிரெ, க. சாவிர, து. சாவிர, துட. சோவெர் (f), கோ.சாவ்ர்ம்.

இ. ஹசார் (hazār), . பெ. ஹசார் (hazār), கி. khilloi for khesloi.

வடமொழியில் மூலமில்லை. அகரமுதல் சகர முதலாய்த் திரிவதும் யகரம் வகரமாய் மாறுவதும் இயல்பாதலால், கன்னடத்தில் ஆயிரம் என்பது சாவிர எனத் திரிந்தது.

ஒ.நோ: இளை - சிளை, உதை - சுதை, உவணம் - சுவணம், ஏண் - சேண், நீயிர் - நீவிர், சேயடி - சேவடி.

கன்னடச் சொல்லையொட்டியே துளுவச் சொல்லும், கன்னடத் திரிபான படகச் சொல்லை யொட்டியே துடவச் சொல்லும் கோத்தச் சொல்லும், இவற்றை யொட்டியே வடசொல்லும், சகர முதலாய்த் திரிந்துள்ளன. இதை அறியாது, பேரா.பரோ வடசொல்லையே தென்சொற்கு மூலமாய்த் தம் அகரமுதலியிற் காட்டியிருப்பது, தமிழைப் பற்றிய தவற்றுக் கருத்தினாலேயே.

-வடமொழி வரலாறு-1, ப.83

          அகரமுதல் சொல், சகரமாகத் திரியும் என்னும் நெறிப்படி, ‘ஆயிரம்’ சொல், கன்னடத்தில் ‘சாவிர’ எனத் திரிந்ததாகப் பாவாணர் எழுதினார். ஆயினும், அகர உயிர்முதற்சொற்கள், சகரமாகத் திரியும்போது, அவை முதலில் யகரமாகத் திரிந்து பின்னர் சகரமாகத் திரியும் என்பதே பொருத்தமாகும். இதன் கூடுதல் விளக்கத்தை, ‘ஒக்க’ சொல் வரலாற்றுப் பகுதியில் காண்க.

          தமிழ் – இந்தோ-ஐரோப்பிய ஒப்பீட்டு ஆய்வறிஞராகிய ஸ்டீபன் ஹில்லியர் லெவிற்று(Sthephan Hillyer Levitt) சமற்கிருதத்தின் ‘sahasra’ சொல்லிலிருந்து தமிழின் ‘ஆயிரம்’ சொல் வந்ததாகக் கூறும் அறிஞர்களின் கருத்தினைப் பாவாணர் மறுத்துரைத்து விளக்கியதைத் தம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்(‘Some more possible relationships between Indo-European and Dravidian’, Collected papers in Dravidian Studies, p.28).

sahasra சொல் – மானியர் பிரிப்பு

          ‘ஆயிரம்’ ஆகிய தமிழ்ச் சொல், மேற்சுட்டிய அகர-யகர-சகரத் திரிபில் ஆயிர-யாயிர- hazār(பெர்.) - hazanjra (அவெஸ்.)- சாயிர-சாசிர – Sahasra (சமற்.) என்பதாகத் திரிந்துள்ளது. மானியர், ‘sahasra’ சொல்லை sa + hasra எனப் பிரித்துள்ளார். ‘sa’ என்னும் முன்னொட்டிற்கு ‘உடன்’ என்பது பொருள். அவ் வகையில் ‘sahasra’ என்பதற்கு ‘ஆயிரத்துடன் சேர்ந்தது (that which has a thousand)’ என்பது பொருளாகும். ‘sahasra’ சொல்லை மானியர் பிரித்தவாறு sa+hasra என்று பிரித்தால் சமற்கிருதத்தில் ‘hasra’ சொல்லிற்கு ‘ஆயிரம்’ என்று பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. ‘hasra’ சொல்லிற்கும் நகைச்சுவையைக் குறிக்கும் ‘hāsya’ சொல்லிற்கும் ‘has’ என்பதனை வேராக மானியர் குறிக்கிறார். நகைச்சுவையைக் குறித்த hāsya சொல், எவ்வாறு ஆயிரத்தைக் குறித்த ‘hasra’ சொல்லுடன் உறவுடையது என்பது விளங்கவில்லை. இதன் காரணமாகத்தான் ஆயிரத்தைக் குறித்த சமற்கிருத ‘sahasra’ சொல்லிற்கு வேர் இல்லை எனப் பாவாணர் எழுதினார் போலும்.

ஆயிரம் – sahasra(சமற்.) – khilioi (கிரேக்.) – kilo (ஆங்.)

         ‘khilioi’ என்ற கிரேக்கச் சொல்லினையும் ‘kilo’ ஆகிய ஆங்கிலச் சொல்லினையும் ‘sahasra’ ஆகிய சமற்கிருதச் சொல்லிலிருந்து ஆங்கில வேர்ச்சொல் அகராதிகள் வருவித்து உரைத்துள்ளன.

kilo-

word-forming element meaning "one thousand," introduced in French 1795, when the metric system was officially adopted there; irregularly reduced from Greek khilioi "thousand," from PIE *gheslo- "thousand," source also of Sanskrit sahasra-, Avestan hazanjra "thousand."

Online Etym. Dict.

hazanjra (Aves.) – sahasra (Skt.) – (*gheslo thousand) - khilioi (Gk.) – kilo - one thousand (Eng.)

         ஆயிர-யாயிர- hazār(பெர்.) - hazanjra (அவெஸ்.)- சாயிர-சாசிர – Sahasra (சமற்.) என்றெல்லாம் திரிந்த சொல் திரிபு, பின்னர், செம்பு-கெம்பு போல் சகர-ககர மாற்றத்தில் கிரேக்கத்தில் khilioi எனத் திரிந்திருப்பது பொருத்தமே.         

 

ஆயிரம் – sahasra(சமற்.) – (*gheslo thousand) - khilioi (கிரேக்.) – mille (இலத்.) – mile(ஆங்.)

         ‘ஆயிரம்’ சொல் யாயிர- hazār(பெர்.) - hazanjra (அவெஸ்.)- சாயிர-சாசிர – Sahasra எனத் திரிந்து (*gheslo thousand) என்ற வடிவை எட்டியது. இதனுடன் ‘ஒன்று’ எனப் பொருள்தரும் smī என்னும் முன்னொட்டுடன் சேர்ந்து  smī + ghislī  - mīlle (Lat.) என ஆயிரத்தைக் குறிக்கும் இலத்தீன் சொல்லைத் தோற்றுவித்தது. smī ghislī என்பதற்கு ‘ஓராயிரம்’ என்பது பொருளாக இருந்து பின்னர் ‘ஆயிரம்’ என இன்றைய இயல்புப்பொருளைப் பெற்றுவிட்டது. இலத்தீனின் mīlle சொல்லே பின்னர் ஆங்கிலத்தில் ‘mile’ என்று ஆயிரம் தப்படிகளைக் கொண்ட (4860 feet) தொலைவினைக் குறிக்கும் சொல்லாக வளர்ந்தது. ஒரு தப்படி என்பது ‘ஐந்தடி அல்லது மூன்றடிகொண்ட கால்வைப்பு’ எனச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

mile – million

         ஆயிரம் ஆயிரத்தைக்(1,000,000) குறிக்கும் ஆங்கிலச் சொல் ‘million’. இந்த ‘million’ சொல்லும் ஆயிரத்தைக் குறித்த mile சொல்லிலிருந்து பிறந்ததாக மேலை இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அறிஞர்கள் எழுதியுள்ளனர். ஆயிரத்தைக் குறித்த ‘mile’ சொல், பேராயிரம் (a great thousand) என்னும் பொருளில் ஆயிரம் ஆயிரத்தைப்(1,000,000) பின்னர்க் குறித்துள்ளது.

அயிர் = நுண்மணல் (‘அயிர்துகள் முகந்த ஆனா ஊதை’, நற்.163:2; ‘அயிர்திணி அடைகரை’, அகம்.30:7; ‘அயிர்மணல் படுகரை போகி’, அகம்.113:20; ‘காவிரிப் பேரியாற்று அயிர்’, அகம்.181:12)

அயிர் – அயிரை = சிறுமீன் வகை (‘இருஞ்சேற்று அயிரை’, நற்.272:5; அயிரை பரந்த அந்தண் பழனம், குறுந்.178:1)

அயிர் – அயிரம் – ஆயிரம் = நுண்மணல் துகள் (‘நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவி’,

தொல்.எழுத்து.393; ‘ஆயிரக் கிளவி வரூஉம் காலை’, தொல்.எழுத்து.464; ‘ஆயிரம் விளையுட்டு ஆக’, பொருநர்.247; ‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய’, மதுரைக்.11; ‘வேலி ஆயிரம் விளைக நின் வயலே’, புறம்.391:21; ‘ஆயிர வெள்ளம் வாழிய பலவே’, பதிற்.21:38; ‘ஆயிர வெள்ள ஊழி’, பதிற்.63:20)

திரவிட மொழிகளில் தமிழின் ‘ஆயிரம்’

11 Ta. āyiram the number 1,000. Ma. āyiramKo. ca · vrm (obl. ca · vrt-). To. so · fer, (Töwfiḷy dial.) se · ferKa. sāvira, sāsir, sāsiraKoḍ. a · irë, (Mercara) a · iraTu. sāvira, sāra. / Skt. sahásra-. DED 309.

கீழை இந்தோ-ஐரோப்பியத்தில் தமிழின் ‘ஆயிரம்’

ஆயிர-யாயிர- hazār(பெர்.) - hazanjra (அவெஸ்.)- சாயிர-சாசிர – Sahasra (சமற்.) 

மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் தமிழின் ‘ஆயிரம்’

ஆயிர-யாயிர- hazār(பெர்.) - hazanjra (அவெஸ்.)- சாயிர-சாசிர – sahasra (சமற்.)

*gheslo (thousand) - khilioi (Gk.) – kilo - one thousand (Eng.) 

ஆயிர-யாயிர- hazār(பெர்.) - hazanjra (அவெஸ்.)- சாயிர-சாசிர – sahasra (சமற்.)

*gheslo (thousand) - smī + ghislī - mīlle (Lat.) – mile, million, milli-

English words derived from Tamil āyiram connoting ‘thousand’ (36)

billion; billionaire; chiliad; chiliasm; kilo-; kilobyte; kilocalorie; kilocycle; kilogram; kilojoule; kiloliter; kilometer; kiloton; kilowatt; mil; milfoil; mill; millenarian; millenary; millennium; milli-; milliard; millibar; milligram; milliliter; millimeter; million; millionaire; millionfold; millionth;    millipede; millisecond; quintillion; septillion; sextillion; trillion.

The base forms of the above-mentioned words in the West Indo-European languages are given below:

 Gk. khilioi ‘a thousand; the number 1,000’; Lat. mille ‘thousand.’

Lexical and semantic expansions of Tamil āyiram:

 ayir ‘fine sand’; ayir-ayirai ‘a small fish variety’; ayir-ayiram-āyiram ‘fine sand particles.’

Root forms of Tamil āyiram found in the etymological dictionaries of the West:

 Pokorny: gheslo ‘thousand’; Watkins: gheslo ‘thousand’; Online Etymology: *gheslo- ‘thousand.’

Derivatives segregated into different groups based on phonetic variations of Tamil āyiram

Group I

Words from Tamil āyiram evolved out of *gheslo-’s phonetic forms kiloh, kili, kilee and bilee

*gheslo-’s base forms in the West Indo-European languages found in the Online Etymology Dictionary and other dictionaries are given below:

 Gk. khilioi ‘a thousand; the number 1,000’; Lat. mille.

Etymological development of Tamil āyiram:  

āyira ‘one thousand’  yāyira   cāyira   cācira   sahasra   *gheslo- ‘thousand’   kiloh, kili, kilee, bilee

Group II

Words from Tamil āyiram evolved out of *ghisli-’s phonetic forms milee, mil, miluh, muhle

The base form in the West Indo-European language found in the Online Etymology Dictionary and other dictionaries is given below:

Lat. mille ‘thousand’

Etymological development of Tamil āyiram

āyira ‘one thousand’→  yāyira → cāyira → cācira → sahasra → *gheslo- ‘thousand’ → smi- ‘one’ + ghisli ‘thousand’ (Watkins) → milee, mil, miluh, muhle

 

Tamil āyiram in the East Indo-European Languages

Total no. of East Indo-European words originated from the Tamil root āyiram : 96

Sanskrit (57)  Pali (16) Sinhalese (19) Other East Indo-European Languages (4)
sahásra sahassa sahasra sahásra